அவுஸ்திரேலியா அமெரி;க்க இங்கிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து அணுசக்தியில் இயங்கும் புதிய நீர்மூழ்கி படையணியை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.
இதனடிப்பiயில் அக்கஸ் உடன்படிக்கையின் கீழ் அவுஸ்திரேலியா அமெரிக்காவிடமிருந்து
மூன்று நாடுகளும் இணைந்து நவீனதொழில்நுட்பத்தில் இயங்ககூடிய நீர்மூழ்கி படைப்பிரிவை உருவாக்கவுள்ளன.
அவுஸ்திரேலிய அமெரிக்க பிரிட்டிஸ் தலைவர்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்
பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நீர்மூழ்கிகள் அணுசக்தியில் இயங்கும் அணுவாயுதங்களை கொண்டிராது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை அணுவாயுதங்கள் அற்ற நாடு என்ற அவுஸ்திரேலியாவின் உறுதிமொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் பைடன்தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை மூலம் பிரிட்டினிற்கு பின்னர் அமெரிக்காவின் நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்யும்இரண்டாவது நாடாக அவுஸ்திரேலியா மாறவுள்ளது.
புதிய நீர்மூழ்கிகள் தற்போதுஅவுஸ்திரேலியாவிடம் உள்ள நீர்மூழ்கிகளை விடவேகமாகவும் நீண்டதூரமும் செயற்படக்கூடியவை.
மேலும் இந்த நீர்மூழ்கிகள் மூலம் நீண்டதூரத்தில் வைத்து எதிரிகளை தாக்கும் வலிமையை அவுஸ்திரேலியா பெறும்.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பயிற்சிக்காக அவுஸ்திரேலிய மாலுமிகள அமெரிக்கா பிரிட்டனின் நீர்மூழ்கிகளிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
இந்த உடன்படிக்கையின் கீழ் அமெரிக்காவின் நீர்மூழ்கிகள் 2027 முதல் பேர்த்தில் நிலைகொண்டிருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM