உக்ரேனின் பக்முத் நகரை கைப்பற்றவதற்கான சமரில் 1,100 இற்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனனர் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார்.
கைத்தொழில் நகரான பக்முத்தை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படையினர் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதியிலிருந்து முயன்று வருகின்றனர். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகிய பின்னர் மிக நீண்டகாலமாக நடைபெறும் சமர் இதுவாகும்.
தற்போது பக்முத்தில் உக்கிரமான மோதல் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பக்முத்தின் கிழக்குப் பகுதியை ரஷ்ய படையினர் மற்றும் ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழு ஆகியன கைப்பற்றியுள்ளன. அந்நகரின் மேற்குப் பகுதி உக்ரேனிய படையினர் வசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரத்துக்குள் 1,100 இறகும் அதிகமான எதிரிப் படையினரை நாம் கொன்றுள்ளோம் என உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி கூறியுள்ளார். அத்துடன், மேலு; சுமார் 1500 ரஷ்ய படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை? உக்ரேனின் டோனட்ஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 220 உக்ரேனிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM