ஆனையிறவு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை!

Published By: Nanthini

13 Mar, 2023 | 04:29 PM
image

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் தீர்மானத்துக்கமைய நடராஜர் பணிக்குழுவினால் ஆனையிறவு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலையொன்று நேற்று (12) காலை 9.30 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள ஆனையிறவு பகுதியில் பிரதான வர்த்தக மையம், பாரம்பரிய உணவகம், எரிபொருள் நிலையம், நவீன குளியலறை, விளையாட்டு முற்றம் மற்றும் கடற்கரை உல்லாச விடுதி மற்றும் உணவகம், வங்கி வசதிகள் என்பவற்றுடன் கூடிய ஆனையிறவு வணிக சுற்றுலா மையத்தை நிறுவும் மூல திட்டமிடல் வரைபடத்தின் அடிப்படையில் முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அங்கு இந்த நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் இந்து மத சிவாச்சாரியார்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மா.வை. சேனாதிராஜா ஆகியோருடன் பக்தர்கள் பலரும்  கலந்துகொண்டனர்

27 அடி உயரமான இந்த நடராஜர் சிலை 6 அடி உயரமான பீடத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42