எழுத்தாளர் உமா வரதராஜனின் 'எல்லாமும் ஒன்றல்ல' நூல் வெளியீடு

Published By: Ponmalar

13 Mar, 2023 | 03:45 PM
image

இலக்கிய ஆளுமை எழுத்தாளர் உமா வரதராஜன் எழுதிய 'எல்லாமும் ஒன்றல்ல' கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பேராசிரியர் எஸ்.யோகராசா தலைமையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நேற்று (12) பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பதிப்பித்து வெளியீட்டு வைத்த இந்நூல் வெளியீட்டு விழாவினை வியூகம் கலை, இலக்கிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. நூலின் வெளியீட்டு உரையினை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நிகழ்த்தினார்.

நூலின் முதல் பிரதியை தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.குணராசா பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சி.எல் பெர்ணாண்டோ நூலுக்கான வாழ்த்துச் செய்தியை வழங்கியிருப்பதோடு, நிகழ்வின்போது கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ், பெண் எழுத்தாளர் டொக்டர் திருமதி.புஷ்பலதா லோகநாதன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர், இலக்கிய விமர்சகர் எழுத்தாளர் மன்சூர் ஏ.காதர், உலக கவிஞர் சோலைக்கிளி, எழுத்தாளர் சபா சபேஷன், வாசுதேவன், சிவ-வரதராஜன், சஞ்சீவி சிவகுமார், பி.சஜிந்ரன் ஆகியோர் இங்கு உரையாற்றினார். நூலாசிரியர் உமா வரதராஜன் நிகழ்வின் இறுதியில் எற்புரையை நிகழ்த்தியதோடு நிகழ்வுகளை கிழக்கு மாகாண இளம் கலைஞர் விருதை பெற்றுக் கொண்ட செல்வி எஸ்.கஜானா தொகுத்து வழங்கினார்.

1976 ஆம் ஆண்டு எழுத்தாளர் உமா வரதராஜன் உயர்தர வகுப்பு மாணவனாக இருக்கும் போது கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வின் போது தனது முதலாவது விமர்சன உரையை நிகழ்த்தினார். அன்றிலிருந்து இன்று வரை 46 ஆண்டுகள் இலக்கியத் துறையில் பயணித்த பாதைகளில் அவ்வப்போது கட்டுரை வடிவில் எழுதியவைகள், மேடையில் பேசியவைகள், மேடைகளில் எழுதி வாசித்த கட்டுரைகள் என இந்த புத்தகத்தில் 40 கட்டுரைகள் இடம் பிடித்துள்ளன. இதில் மதிப்பீடுகள், நினைத்தல், ஆளுமைகள், அஞ்சலி, விமர்சனம், முன்னுரைகள் என்ற பல பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆய்வாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளரின் குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56