விமானத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மது அருந்திய விமானி விமானத்திலேயே மயங்கிவிழுந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் கால்கரி விமான நிலையத்தில்லிருந்து விமானம் ஒன்று கடந்த சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் மெக்சிக்கோவுக்கு புறப்படத் தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னர், விமானத்தை இயக்கவிருந்த விமானி அளவுக்கு அதிகமான போதையால் விமானத்தின் உள்ளேயே மயங்கி விழுந்துள்ளார்.
விமானி மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் அளித்துள்ளனர். குறித்த விமானி அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தமை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேறொரு விமானியின் உதவியுடன் விமானம் மெக்சிகோ பயணித்துள்ளது. மேலும் கடமை நேரத்தில் பொறுப்பில்லாமல் பணிக்கு வந்த அந்த விமானியை பாதுகாப்பு அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM