கலை, இலக்கியத்துறையில் ஆர்வம் கொள்ளும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்திவரும் எவோட்ஸ் கலை கலாசார போட்டித் தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான போட்டிகளின் முதல் அம்சமாக கவிதைப் போட்டி நடத்தப்படவுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கவனிக்க வேண்டியவை:
1. விரும்பிய கருப்பொருளில் கவிதைகளை எழுதலாம்.
2. ஒருவர் ஒரு கவிதைப் பிரதியை மட்டுமே அனுப்ப முடியும். அக்கவிதை முன்னர் எந்தவொரு ஊடகத்திலும் வெளியானதாக இருக்கக்கூடாது.
3. நீங்கள் எழுதுவது கவிதை, புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதையாக கூட இருக்கலாம்.
4. கவிதையானது 8 வரிகளுக்கு குறையாமலும் 24 வரிகளுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
5. நீங்கள் அனுப்பும் கவிதைகள் கட்டாயமாக பாமினி (Bamini) fontஇல் டைப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
6. உங்களது கவிதைகளை puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது puthiyaalai வட்ஸ்அப் குழுவுக்கோ அனுப்பலாம்.
7. கவிதைகள் அனுமதிக்கப்படும் இறுதித் திகதி: 25.03.2023
8. போட்டி முடிவுகள் 2023 ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் அறிவிக்கப்படும்.
9. இம்முறை பரிசளிப்புக்கான மூன்று போட்டிகளும் ஒன்றாகவே நடத்தப்படும்.
10. பரிசு விபரங்கள் வருமாறு:
முதல் பரிசு - ரூ. 10,000 + சான்றிதழ்
இரண்டாம் பரிசு - ரூ. 7,500 + சான்றிதழ்
மூன்றாம் பரிசு - ரூ. 5,000 + சான்றிதழ்
(போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான விருது எதிர்வரும் 30.01.2024 அன்று நடைபெறவுள்ள விருது விழாவில் வழங்கப்படும்.)
மேலதிக விபரங்களை பெற: 076 2002701, 077 6274099, 077 7412604, 077 7111905
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM