பதுளை, பசறை, மொனராகலை கல்வி வலயங்களில் உள்ள தமிழ் மொழி மூல உயர்தர பாடசாலைகளில், உயர்தரம் கற்று பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு இராஜாங்க கல்வி அமைச்சர் அ.அரவிந்குமாரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.9.00 மணிக்கு பதுளை, சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இச்செயலமர்வில் வளவாளர்களாக ஊவா வெல்லஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மார்க்கண்டன் ரூபவதனன், ஆசிரிய ஆலோசகர் எஸ்.பிரபாகரன், NAITA தொழிற்பயிற்சி நிலையத்தின் தொழில் ஆலோசகர் ஏ.எல்.கே. சத்துரங்க, தொழிநுட்பக் கல்லூரியின் (TEC) ஆலோசனை அதிகாரி சாமிக்க இசுரங்க மற்றும் பதுளை, உயர் தொழிநுடபக் கல்லூரியின் தொழில் ஆலோசனை அதிகாரி ரங்கன விதானகமகே ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல், உளவள மேம்பாடு, பல்கலைக்கழகங்களில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடநெறிகள், தொழிற் கல்வி கற்கை வாய்ப்புகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக கற்க வேண்டிய பாடநெறிகள் என்பன தொடர்பாக விரிவான விளக்கம் வழங்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM