கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கல்வியமைச்சர் பணிப்பு

Published By: Digital Desk 5

09 Mar, 2023 | 05:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) எதிர்க்கட்சி எம்பி புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார்.

புத்திக பத்திரண எம். பி தமது கேள்வியின் போது,

நேற்று (08) இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ளே பிரவேசித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதன் காரணத்தாலேயே ஒருவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் நாட்டின் ஜனாதிபதியும் சபாநாயகரும் கல்வி அமைச்சரும் கல்வி பயின்ற பல்கலைக்கழகமாகும்.

அத்தகைய புகழ்மிக்க பல்கலைக்கழகத்துக்குள் படையினர் பிரவேசித்து இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை கவலைக்குரியது. அது தொடர்பில் கல்வியமைச்சர் என்ற வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்

பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் நிலவிய உள்ளக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையிலேயே பாலி பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து அன்று குழப்பத்தை ஏற்படுத்தினர்.

அதேவேளை பல்கலைக்கழகங்களுக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளை விடுத்து தற்போது நாட்டின் பொது பிரச்சினைகளுக்காகவே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

என்றாலும் கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்திருக்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19