(எம்.நியூட்டன்)
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மகளிர் உரிமையை மதிப்போம்’ என்ற தொனிப்பொருளிலான பேரணியும் மகளிர் சுயதொழில் முயற்சியாளர்களின் விழிப்புணர்வு கண்காட்சியும் விற்பனையும் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக ஆரம்பமான பேரணியானது யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள மடுத்தினார் குருமட முன்வாசலில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில் மகளிர் உரிமையைப் பாதுகாப்போம், சுய முயற்சியே சுதந்திர வாழ்வு, மகளிர் உரிமைகள் மதிக்கப்படவேண்டும், மகளிரை மதித்தல் மானிடத்தின் பண்பு, முயற்சியால் முன்னேறும் மகளிர் நாம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கிய வாறும் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். பேரணியின் முடிவில் பெண் முயற்சியாளர்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கரித்தாஸ் கியூடெக் இயக்குநர் அருட்பணி யூஜின் பிரான்சிஸ் மற்றும் பணியாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM