(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை ஆனால் தற்போதைய நிலைமையில் நிதியை வழங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பிலேயே கூறுகின்றோம் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தேர்தல் வேண்டாம் என்று நிதி அமைச்சோ, திறைசேரியோ தீர்மானிக்கவில்லை. தற்போதைய சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தே கதைக்கின்றோம்.
வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. வருமானத்தை விடவும் செலவு அதிகமாகவே உள்ளன.
மார்ச் மாதத்திலேயே அதிகளவில் செலவுகள் உள்ளன. அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு, கடன் மீளச் செலுத்துகை, மருத்துவ வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை விநியோகித்தல், உர விநியோகம் ஆகியவற்றை செய்ய வேண்டும். இவற்றுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் விநியோகிக்கவில்லை என்று கேட்கின்றனர். முறையான நிதி முகாமைத்துவம் செய்தே தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
அமைச்சருக்கு உள்ள அதிகாரத்திற்கமைய மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக நிதி முகாமைத்துவம் தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம். இதன்படி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு முதலில் நிதியை வழங்க வேண்டும். இவற்றை பின்தள்ளி வைத்துவிட்டா, வேறு விடயத்திற்கு நிதியை வழங்க முடியும் என்று கேட்கின்றோம்.
முன்னுரிமை வழங்கும் விடயத்தில் எதனை நிறுத்துவது என்று கூறுங்கள். பெப்ரவரி மாதமே குறைவான வருமானம் கிடைக்கும் மாதமாக இருக்கும். இப்படி இருக்கையில் வேறு விடயத்திற்கு நிதியை ஒதுக்க முடியுமா?
இதேவேளை நிதி அமைச்சின் செயலாளர் தேர்தலை நடத்தாது இருப்பதற்காக பணத்தை வழங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இவர் சிறந்த அதிகாரி, நாட்டுக்காக தீர்மானங்களை எடுப்பவர். மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசியை சமர்ப்பித்து பணத்தை வழங்க முடியாது இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அவர் நிதியை வழங்க முடியாது என்று கூறவில்லை. இருக்கும் செலவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
சவால்களையே அவர் குறிப்பிட்டுள்ளார் ஆனால் ஒருபோதும் நிதியை வழங்க முடியாது என கூறவே இல்லை. ஏற்கனவே ஒருதொகை நிதி தேர்தலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனை வேறு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டாம் என கேட்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM