(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டை மீண்டும் அதள பாதாளத்திற்குள் தள்ளுவதற்காகவா ஒரு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேர்தல் இடம்பெறும் வரையிலாவது போராட்டத்தை நாட்டுக்காக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
போராட்டம் தீவிரமடையும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளும் வருகை தர மாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப்பெறாது என மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) புதன்கிழமை இடம்பெற்ற கலால் சட்டம் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார பாதிப்பின் நேரடி தாக்கத்தை குடும்ப பெண்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். தமது பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
2020-2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார கொள்கையினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது,இதனை தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களால் தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டம் கட்டமாக குறைவடைந்து செல்கிறது இதனை குடும்ப பெண்கள் நன்கு அறிவார்கள்.
பாரிய போராட்டத்துக்கு பின்னர் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. நாட்டை மீண்டும் அதளபாதாளத்துக்கு தள்ளும் வகையில் ஒரு தரப்பினர் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்,வரி அதிகரிப்புக்கு எதிராக போராடுபவர்கள் மாதம் இலட்சக்கணக்கில் ஊழியம் பெறுகிறார்கள்.நாடு முன்னேற்றமடைய வேண்டுமாயின் அனைவரும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்.
போராட்டத்தால் அரசாங்கத்தை மாற்ற முடியாது,ஆகவே ஜனநாயக ரீதியில் தேர்தல் இடம்பெறும் வரை தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தேர்தலில் தமக்கான அரசாங்கத்தை தாராளமாக தெரிவு செய்து கொள்ளலாம்,
நாட்டின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் தற்போது முன்னேற்றமடைந்து வருகிறது,இவ்வாறான சூழலில் நாட்டில் போராட்டம் தீவிரமடைந்தால் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தரமாட்டார்கள், வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப் பெறாது,ஆகவே நாட்டை கருத்திற் கொண்டு தொழிற்சங்கத்தினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் போராட்டத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM