(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் )
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட சாதனை நாயகன், முன்னாள் தேசிய வீரர் டக்சன் பியூஸ்லஸின் முதலாம் வருட ஞாபகார்த்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஜோசப் வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
மன்னார் கால்பந்தாட்ட லீக் அனுசரனையுடன் மாந்தை பிரதேச விளையாட்டு மைதானத்தில் இப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த சுற்றுப் போட்டியில் மாவிலங்கேணி அலோசியஸ் அணியை 5 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் ஐக்கிய விளையாட்டுக் கழகம் இலகுவாக வெற்றியீட்டியது.
தொடர்ந்து கால் இறுதிப் போட்டியில் உப்புக்குளம், அல்பதா அணியை 2 – 0 என்ற கோல்கள் அடிப்படையிலும் அரை இறுதியில் எமில் நகர் இருதயநாதர் 4 – 0 என்ற கோல்கள் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
திங்கட்கிழமை (06) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பனங்கட்டிக்கொட்டு சென். ஜோசப் அணியும் ஜோசப் வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டு கழக அணியும் மோதின.
ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்ததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து வெற்றி அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 7 – 6 என ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று அங்குரார்ப்பண பியூஸ்லஸ் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM