ஆப்கானில் பெண்கள் பல்கலைகழகங்களிற்கு செல்வதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளமைக்கு எதிராக காபுல் பல்கலைகழகத்திற்கு வெளியே மாணவிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பல்கலைகழகங்களிற்கு திரும்பியுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல மாகாணங்களில் மாணவர்களிற்கான பல்கலைகழக வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன என தலிபான் அறிவித்துள்ளது.அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான சூழலில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தலிபான் அறிவித்துள்ளது.
ஆண்மாணவர்கள் காணப்படும் படங்களும் வெளியாகியுள்ளன.
தனியார் பல்கலைகழகமொன்றில் பெண்மாணவிகளின் படம் காணப்படும் பதாகையொன்றை ஸ்பிரே பெயின் பயன்படுத்தி மறைத்துள்ளதை காணமுடிகின்றது.
பல்கலைகழக கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமானது குறித்து மகிழ்ச்சி ஆனால் எங்கள் சகோதரிகள் கற்றலில் ஈடுபடமுடியாதது கவலை அளிக்கின்றது என நசீர் என்பவர் ஆப்கானின் டொலோ செய்திக்கு தெரிவித்துள்ளார்.
மாணவிகள் இஸ்லாமிய ஆடைவிதிமுறைகளை பயன்படுத்தாதன் காரணமாகவும் இஸ்லாமிய விதிமுறைகளை பின்பற்றாததன் காரணமாகவும் பல்கலைகழங்களில் மாணவிகள் கற்பதை தடை செய்துள்ளதாக தலிபான் தெரிவித்துள்ளது.
மாணவிகள் ஆண்துணையின்றி நடமாடுவது போன்றவற்றை தலிபான் காரணமாக காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM