பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹரி தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியவில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக அரியணை ஏறினார்.
இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியான மேகன் மார்கலே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹரி தம்பதி பிரித்தானியா செல்வார்களா? என்பது பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இளவரசர் ஹரி தம்பதிக்கும், அரச குடும்பத்திற்கும் இடையேயான உறவில் தொய்வு ஏற்பட்ட நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மேகனின் சொந்த ஊருக்கு இளவரசர் ஹரி தம்பதி புலம்பெயர்ந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM