தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம்வரும் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் நடிகர் நிஷாந்த் ரூசோ ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'பருந்தாகுது ஊர் குருவி' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
அதனை தமிழ் திரையுலகின் இளம் படைப்பாளிகளான மாரி செல்வராஜ், விருமாண்டி, முத்துக்குமார், கணேஷ் கே.பாபு, தயாரிப்பாளர் பிரபு திலக், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் கோ. தனபாலன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'பருந்தாகுது ஊர் குருவி'.
இதில் விவேக் பிரசன்னா மற்றும் நிஷாந்த் ரூசோ ஆகியோருடன் காயத்ரி ஐயர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் 'ராட்சசன்' வினோத் சாகர், அருள் சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அஸ்வின் நோயல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ரஞ்சித் உன்னி இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை லைட்ஸ் ஆன் மீடியா எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சுரேஷ், வெங்கி சந்திரசேகர், சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ரக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் பிரத்தியேக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதன்போது படத்தின் இயக்குநர் தனபாலன் பேசுகையில்,
''வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒருபோதும் நிலைக்காது என்ற கருத்தினை மையப்படுத்தி இப்படம் தயாராகியிருக்கிறது. சர்வைவல் த்ரில்லர் ஜேனரில், டிஜிட்டலில் தயாரான இந்த ஊர்க்குருவி ரசிகர்களின் பேராதரவால் பருந்தாகும்...'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM