சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை விசேட அரசியலமைப்பு பேரவைக் கூட்டம்

Published By: Vishnu

06 Mar, 2023 | 09:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்திற்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியலமைப்பு பேரவை முன்னெடுத்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்துக்கான விண்ணப்பம் கடந்த பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை கோரப்பட்டது. சிவில் பிரஜைகளிடமிருந்து 100 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை நாளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஆளும் தரப்பினர் வலியுறுத்துகின்ற நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தி தேர்தல் நடவடிக்கைகளை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதி;கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,ஏனெனில் தேர்தல் நடவடிக்கைகள் சட்டத்திற்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18