நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மெமரீஸ்' எனும் திரைப்படம், சிக்கலான சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீண் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'மெமரீஸ்'. இதில் 'எட்டுத் தோட்டாக்கள்' புகழ் வெற்றி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பார்வதி அருண் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ரமேஷ் திலக், ஹரிஷ் பராடி, விபின் கிருஷ்ணன், டயானா ஹமீத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்மோ மற்றும் கிரண் நுப்தியால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார்.
சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிஜு தமின்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிஜு தமின்ஸ் தயாரித்திருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஷிபு தமின்ஸின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த 'மெமரீஸ்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் பங்குபற்றினர்.
இதன் போது படத்தின் நாயகனான வெற்றி பேசுகையில், '' எட்டு தோட்டாக்கள் படம் வெளியான பிறகு இப்படத்தின் இயக்குநர்கள் எம்மை தொடர்பு கொண்டு, இந்த கதையை விவரித்தனர். தயாரிப்பாளருடன் வாருங்கள்.
நடிக்கிறேன் என தெரிவித்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று காலகட்டத்தின் போது தயாரிப்பாளருடன் எம்மை சந்தித்தனர்.
படப்பிடிப்பிற்காக கேரளாவிற்கு சென்று அங்கு 14 நாட்கள் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகு படப்பிடிப்பில் பங்கு பற்றினேன். இந்த திரைப்படத்தில் நான்கு விதமான வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறேன்.
இது புது அனுபவமாக இருந்தது. மேலும் அடர்ந்த காடுகளில் இரவு நேரத்தில் மழையில் நனைந்து கொண்டே படப்பிடிப்பில் பங்குபற்றியதும் மறக்க இயலாத அனுபவம். '' என்றார்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகியான பார்வதி அருண், உடன் பணியாற்றிய சக நடிகரான வெற்றியைப் பற்றி எந்த விடயத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, '' படப்பிடிப்பு தளத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக... திட்டமிட்டு தான் வெற்றியைப் பற்றி நான் பேசவில்லை.' என பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM