யாழ்ப்பாணம், கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.க. கணபதிப்பிள்ளையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி திரு எஸ் பரமானந்தம் கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ கருணலிங்கம் லயன் டாக்டர் வி. தியாகராஜா முன்னாள் விரிவுரையாளர் திரு வி. எஸ். குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஆண் ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலில் இருந்து புறப்பட்டு இராச வீதி வழியாக நல்லூர் கோவிலை அடைந்து, பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலையை வந்தடைந்தனர்.
பெண்ஆசிரிய மாணவர்கள் கலாசாலை முன்றிலிருந்து புறப்பட்டு இராஜ வீதி வழியாக இராமசாமி பரிகாரி சந்தியை அடைந்து, ஆடியபாதம் வீதி வழியாக கல்வியங்காட்டு சந்தியை அடைந்து, பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து கலாசாலை வாயிலை வந்தடைந்தனர்.
நாற்பது வயதுக்கும் ஐம்பது வயதுக்கும் இடைப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரிய மாணவர்கள் இவ்வீதியோட்டத்தில் பங்கேற்றமையை பலரும் பாராட்டி வாழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM