எம்மில் பலரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு புதிய புதிய உத்திகளை கண்டறிந்து கொண்டே இருக்கிறார்கள். இதில் சிலருக்கு வெற்றியும், பலருக்கு தோல்வியும் கிடைக்கிறது. வெற்றி பெற்றவர்கள் அதன் ரகசியத்தை ஒருபோதும் வெளியே சொல்வதில்லை.
தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெறுவதற்கான சூட்சுமத்தை தொடர்ந்து தேடத் தொடங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜோதிட நிபுணர்கள் பலர் வெற்றிக்கான சூட்சுமத்தை அவதானிப்பதில் வல்லவர்கள். எம்முடைய ஜாதகத்தை ஜோதிட நிபுணர்களிடம் காண்பிக்கும் போது.., அவர்களால் ஒரே முறையில் அனைத்தையும் துல்லியமாக அவதானித்து விட இயலாது.
இதற்காக சோதிடர்களை மாற்றாமல், தொடர்ந்து அவரையே பின் தொடர்ந்தால்... அவர்கள் பல நுட்பமான விடயங்களை சூசகமாக வலியுறுத்தக்கூடும். அதில் ஒன்றுதான் ஆகமி கிரக வழிபாடு.
ஆகமி கிரக வழிபாடா...? என வியக்க வேண்டாம். உங்களுடைய ஜாதகத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான சூட்சுமம் புதிராக புதைந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் ஆகமி கிரகம்.
ஆகமி கிரகம் என்றால் உங்களுடைய ஜாதக கட்டத்தில் நவகிரகங்கள் இடம் பெற்றிருக்கும். இது இயல்பானது. அதேபோல் பன்னிரண்டு கட்டங்களிலும் நவக்கிரகங்கள் இடம் பெற்றிருக்க இயலாது. இதுவும் இயல்பானது தான். அதே தருணத்தில் உங்களுடைய ராசி கட்டத்தில் நவகிரகங்கள் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தின் பாதசாரத்தில் அமையப்பெற்றிருக்கும். இதில் ஏதேனும் ஒரு கிரகத்திற்குரிய நட்சத்திரத்தில்.... எந்த கிரகமும் அமையவில்லை என்றால்.. அதுதான் ஆகமி கிரகம்.
உதாரணத்திற்கு உங்களுடைய ஜாதகத்தில் குரு ஏதேனும் ஒரு நட்சத்திரத்தின் பாதசாரத்தில் அமைந்திருப்பார். ஆனால் குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய குருவின் நட்சத்திரத்தின்… நான்கு பாதங்களிலும் எந்த கிரகமும், அதாவது சூரியன் முதல் கேதுவரையிலான நவகிரகமும் அமையவில்லை என்றால், அந்த ஜாதகம் ஆகமி கிரக ஜாதகம்.
இதுபோல் நவகிரகங்களுக்குரிய நட்சத்திரங்களின் பன்னிரண்டு பாதங்களிலும்... எந்த கிரகமும் இல்லை என்றால்.., அதனை ஆகமி கிரகம் என்று குறிப்பிடலாம்.
உதாரணத்திற்கு குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் நான்கு பாதங்களிலும் எந்த கிரகமும் இடம்பெறவில்லை என்றால், நீங்கள் வியாழக்கிழமைகளில் குருவாக இருக்கும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குரு, மகான்கள் என சொல்லப்படும் சீரடி சாய்பாபா, மஹா பெரியவர் போன்றவர்களை வழிபடத் தொடங்கினால்... உங்களுக்கு குருவால் கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்க தொடங்கும். மேலும் துன்பங்கள் விலகத் தொடங்கும்.
சிலருக்கு சுக்கிரன் கிரகத்தின் நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால், அவர்கள் மகாலட்சுமியை வணங்கத் தொடங்கினால்.. வளர்ச்சி உறுதி. சிலருக்கு கேது கிரகத்தின் நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லை என்றால், அவர்கள் விநாயகப் பெருமானை வணங்குவதுடன்… சிதறு காய் அடித்து பிரார்த்தனையை தொடங்கினால் அவை நிறைவேறுவது உறுதி.
வாழ்க்கையில் பல நுட்பமான விடயங்களை கண்டறிந்து அதனை செயல்படுத்தும் போது வெற்றி என்பது தொடங்கும். அந்த வகையில் உங்களது ஜாதகம் ஆகமி கிரக வழிபாட்டுக்குரியதாக இருந்தால்.., அதனையறிந்து வழிபட தொடங்குங்கள். வெற்றியை சாத்தியமாக்குங்கள்.
தகவல் : ஜோதிலிங்கம்
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM