சம்பளமில்லாது விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க அவதானம் - சானக வகும்பர

Published By: Vishnu

02 Mar, 2023 | 04:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதி நீடிக்கப்படுமாயின் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க விசேட நடவடிக்கை எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் நிதி நெருக்கடி மேலும் தீவிரமடையும். அரச வருமானம் அரச சேவைக்கு போதுமானதாக அமையாத நிலையில் அமைச்சுக்களின் செலவுகள் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7000 அதிகமான அரச சேவையாளர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.

நிதி நெருக்கடியினால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இழுபறி நிலையில் உள்ள போது அரச சேவையாளர்களினால் தொடர்ந்து சம்பளமில்லாத விடுமுறையில் இருக்க முடியாது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை நடத்தும் திகதி நீடிக்கப்படுமாயின் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க விசேட நடவடிக்கை எடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சர்,பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

அரசாங்கம் எடுத்த ஒருசில கடுமையான தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு கண்டதன் பின்னர் தேர்தலை நடத்துவது சிறந்ததாக அமையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15