தெலுங்கின் முன்னணி இயக்குநரான அஜய் பூபதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'செவ்வாய்க்கிழமை' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
தெலுங்கில் வெளியான 'ஆர். எக்ஸ். 100' , தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ' மஹாசமுத்திரம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'செவ்வாய் கிழமை'.
இந்த திரைப்படத்தை இயக்குவதுடன் சுவாதி குணபதி மற்றும் எம். சுரேஷ் வர்மா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'காந்தாரா' புகழ் அஜினீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் பட்டாம்பூச்சி பெண் இரண்டு கோரமான கண்கள் ஆகியவற்றை இடம் பெற வைத்து, ஓவியம் போல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு, 'செவ்வாய்க்கிழமை' என தலைப்பிடப்பட்டிருப்பதால், இந்த திரைப்படம் மிஸ்டரி திரில்லர் ஜேனரில் உருவாகும் என அவதானிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM