கோப்பாயில் சி.ஐ. டி. எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையரால் 38 பவுண் நகை கொள்ளை

Published By: Digital Desk 5

01 Mar, 2023 | 11:25 AM
image

புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் ஒருவர் 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தம்பதியினர் வசித்து வரும் நிலையில் , நேற்றைய தினம் குறித்த நபர் தன்னை புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக்கொண்டு, வயோதிப தம்பதியினரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது போன்று பாசாங்கு செய்துள்ளார்.

பின்னர் வீட்டினை சோதனையிட வேண்டும் எனக் கூறி வீட்டினுள் சென்று , அலுமாரிகளை சோதனையிட்டு , அங்கிருந்த 38 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18