மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 177ஓட்டங்களால் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா தொடரையும் கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட்போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து ஜோ போர்ன்ஸ்(128), உஸ்மான் ஹவாஜா(144), அணித்தலைவர் ஸ்டீபன் ஸ்மித்(134), அடம் வோக்ஸ்(106) ஆகியோரின் பங்களிப்போடு 551 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்றது. 280 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா நேற்று முன்தினம் 3ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் மூன்று விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 179 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் 460 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியா 282 ஓட்டங்களை மட்டுமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ராம்டின் 59 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஹோல்டர் 68 ஓட்டங்களையும் எடுத்தனர். அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜேம்ஸ் பட்ரின்சன்(2), நெதன் லயன்(3), மிச்சல் மார்ஷ்(4) அபாரமாக பந்து வீசியிருந்தனர்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM