பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்டவர் அக்கரைப்பற்றில் கைது

Published By: Vishnu

28 Feb, 2023 | 10:29 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த மட்டு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கொள்ளையன் ஒருவரை 27 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 54 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த கொள்ளையனை அக்கரைப்பற்று பகுதியில் வைத்த பொலிசார் கைது செய்தனர்.

குறித்த நபர் மட்ட கல்லடி வேலூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கிளிநொச்சி உட்பட பல இடங்களில் திருமணம் முடித்துள்ளதாகவும் மட்டக்களப்பில் இரு கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்ததுடன் ஏறாவூரில், காத்தான்குடி, வாழைச்சேனை, அம்பாறை ஆலையடிவேம்பு, கிளிநொச்சி, பொலிஸ் பிரிவுகளில் 20 வீடுகளுக்கு மேல் உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் நீண்டகாலமாக தலைமறைவாகிவந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-12-13 14:36:56
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் 590...

2025-12-13 14:39:38
news-image

15 வயது மாணவி மீது பாலியல்...

2025-12-13 12:29:31
news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:45:21
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 14:54:39
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30