வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை ; இலங்கை இணங்கவில்லை என்கிறது அரசாங்கம்

Published By: Digital Desk 3

28 Feb, 2023 | 04:49 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடனான அண்மைய பேச்சுவார்த்தைகளின் போது மீண்டும் 2.5 சதவீதத்தால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் வட்டி வீதங்களைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர் , வங்கி வட்டி வீதங்களின் அடிப்படையிலேயே பண வீக்க வீதமும் உள்ளடங்கியுள்ளதால் அது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் பங்களிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வங்கி வட்டி வீதங்களை குறைப்பதாக சில அரசியல்வாதிகள் மக்களுக்கு உறுதிமொழியளிக்கின்றனர். அது அவர்கள் அறியாமையினால் வெளியிடும் கருத்தாகும்.

நிதி சட்டத்திற்கமைய வங்கி வட்டி வீதங்களை தீர்மானிப்பது மத்திய வங்கியாகும். மத்திய வங்கியின் நிதி சபையின் ஊடாக எடுக்கப்படும் தீர்மானத்திற்கமையவே கொள்கை ரீதியிலான வட்டி வீதம் மற்றும் வங்கி வட்டி வீதம் என்பன தீர்மானிக்கப்படுகின்றன.

அதற்கமைய பண வைப்பாளர்களுக்கான வட்டி வீதம் மத்திய வங்கியினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. திறைசேரியின் கடன் வழங்கல் செயற்பாடுகளின் போது வட்டி குறித்த தீர்மானங்களிலும் மத்திய வங்கியின் தலையீடு காணப்படும். மத்திய வங்கியின் வட்டி வீதமானது நாட்டின் பணவீக்க வீதத்துடன் பிணைந்தாகக் காணப்படுகிறது.

அதற்கமைய பணவீக்க வீதம் படிப்படியாக வீழ்ச்சியடையும் போது வட்டி வீதமும் வீழ்ச்சியடையும். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களும் வங்கி வட்டி வீதங்களைக் குறைக்குமாறு அரசாங்கத்தையே வலியுறுத்துகின்றனர்.

அவ்வாறு அரசாங்கத்தினால் வட்டி வீதத்தினைக் குறைக்க முடியாது. நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான ஆயுதமாகவே மத்திய வங்கியினால் வங்கி வட்டி வீதம் பயன்படுத்தப்படுகிறது.

எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய வங்கியிடமே இதனை வலியுறுத்த வேண்டும். அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது மேலும் நூற்றுக்கு 2.5 சதவீதத்தினால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் இலங்கை தரப்பு அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31