ஆர்ப்பாட்டங்களின் மீதான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் - சஜித் பிரேமதாச

Published By: Vishnu

27 Feb, 2023 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கும் , மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும்.

அரசாங்கத்தின் இது போன்ற அடக்குமுறைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித நிபந்தனையும் இன்றி எதிர்ப்பினை வெளியிடும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அரசாங்கத்தினால் தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையின் காரணமாக பலர் காயமடைந்துள்ளமையானது, ஜனநாயகத்திற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலாகும்.

எந்தவொரு கட்சியோ அல்லது தலைவரோ எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியானவர்களாக இருந்ததில்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் என்பவற்றை மேற்கொண்டதன் ஊடாக , அதில் கலந்து கொண்ட மக்களை அரசாங்கம் அச்சுறுத்தியுள்ளது.

ஜனநாயகத்தைக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை சத்தமின்றி அமைதியாக இருக்குமாறு அரசாங்கம் எச்சரிக்கின்றது. ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு தாக்குதலுக்கும் நிபந்தனைகள் இன்றி ஐக்கிய மக்கள் சக்தி அதன் எதிர்ப்பினை தெரிவிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47