(எம்.மனோசித்ரா)
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. இதனால் சகலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். எனினும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. மேலதிக வரி செலுத்த வேண்டியேற்பட்டுள்ளமையால் எனது தீர்மானம் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் அறிவேன். எவ்வாறிருப்பினும் அந்த தீர்மானங்களை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. அதனை தட்டிக்கழிக்க முடியாது.
றோயல் கல்லூரி மாணனான நான் தப்பிச் செல்லப் போவதில்லை. பொறுப்புகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு றோயல் கல்லூரி எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை. எனவே தான் நான் தீர்க்கமான முடிவினை எடுத்துள்ளேன். கிரேஸ் நாட்டுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்பட நான் இடமளிக்கப் போவதில்லை.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள கடனுதவியுடன் அடுத்த ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுக்குள் சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்வதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.
மேலும் நாட்டின் சட்டத்துறைக்காக றோயல் கல்லூரி ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சட்டத்துறைகள் குறித்தும் இளம் சட்டத்தரணிகளுக்கு எடுத்துரைத்தார்.
துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத்துறை பிரவேசத்திற்காக இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கடல்சார் பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவத்தை பெறுமாறும் துறைமுக நகரத்தில் புதிய சட்ட அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.
புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM