துருக்கி பூகம்பம்: இடிந்துவீழ்ந்த கட்டடங்கள் தொடர்பில் 200 பேர் கைது

Published By: Sethu

27 Feb, 2023 | 10:50 AM
image

துருக்­கியில் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தி­னால் கட்­ட­டங்கள் இடிந்து வீழ்ந்­தமை தொடர்­பில், கட்­ட­டங்­க­ளுக்குப் பொறுப்­பான நிர்­மா­ணத்­து­றை­யி­ன­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் விசா­ர­ணை­களை  துருக்­கிய அதி­கா­ரிகள் விஸ்­த­ரித்­துள்­ளனர். இது தொடர்பில் 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்படுள்ளனர் என அந்நாட்டு நீதியமைச்சு தெரிவித்துள்ளது,

கடந்த 6 ஆம் திகதி துருக்­கியின் தென் பகு­தியில் ஏற்­பட்ட 7.8 ரிக்டர் அள­வி­லான பாரிய பூகம்­பத்­தினால், துருக்கி மற்றும் சிரி­யாவில் உயி­ரி­ழந்­தோரின் எண்ணிக்கை 50,000ஐ கடந்­துள்­ளது.

வெள்ளிக்கிழமை வரை துருக்­கியில் 44,218 பேர் உயி­ரி­ழந்­துள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு அனர்த்த மற்றும் அவ­ச­ர­நிலை முகா­மைத்­துவ அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. அதே­வேளை சிரி­யாவில் 5,914 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, தரக்­கு­றை­வான கட்­டட நிர்­மா­ணங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக துருக்­கிய அதி­கா­ரிகள் குற்­ற­வியல் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­­ற­னர்.

இது தொடர்பில்,  626  சந்­தேக நபர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். இவர்களில் சிலர் பூகம்பத்தினால் உயிரிழந்துள்ளனர். ஏனையோர் தேடப்படுகுன்றனர் என துருக்­கியின் நீதியமைச்சு தெரி­வித்­துள்ளது.

ஏற்‍கெனவே 200 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதியமைச்சு தெரி­வித்­துள்ளது.

பூகம்­பத்­தை­ய­டுத்து 11 மாகா­ணங்­களில் 1,250,000 கட்­ட­ட­ங்கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும்  அவற்றில் 520,000 வீடு­களை உள்­ள­டக்­கிய 164,321 கட்­ட­டங்கள் ஏற்­கெ­னவே இடிந்­துள்­ளன அல்­லது கடு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளன என சுற்றாடல்­துறை அமைச்சர் முராத் குரும் தெரி­வித்­துள்ளார். 

இதே­வேளை, பூகம்­பத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக  270,000 வீடு­களை ஒரு வரு­டத்­துக்குள் நிர்­மா­ணிக்­கப்­படும் என துருக்­கியின் ஜனா­தி­பதி தையீப் அர்­துகான் தெரி­வித்­துள்ளார். 

2 இலட்சம் தொடர்­மாடி குடி­யி­ருப்­பு­களையும், 70,000 கிரா­மிய வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு துருக்கிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 15 பில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48