‘பில்கேட்ஸ்’போன்று வரவேண்டும், ‘அம்பானி’ போன்று வரவேண்டும், ‘அதானி’ போன்று வரவேண்டும் என்று இன்றைய கால இளைஞர்கள் கூறும் வாசகமாக இருக்கின்றது. அதற்கு கல்வி, செல்வாக்கு, தொழில் போன்றன பல காரணங்கள் இருந்தாலும் மேற்கூறிய பிரபல்யமானவர்கள் உலகத்தில் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் முதன்மை இடத்தை பெறுகின்றார். அவர்கள் எவ்வாறு அந்த உயர்ந்த இடத்தில் உள்ளார்கள் என்று ஆராய்வோமானால் அதற்கு முதன்மை காரணமாக இருப்பது அவர்கள் முதலீடாகவும் உரிமையாளராகவும் இருக்கின்ற கம்பனிகளின் பங்குகள் அதிஉச்ச விலையில் இருப்பதேயாகும்.
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் விரும்புவது சிறந்த கல்வி, நல்லொழுக்கம், நல்ல குடும்பம், மற்றும் சந்தோசமான வாழ்க்கை என்பவற்றுடன் சிறந்த ஒரு செல்வந்தனாக இந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும். இதை அடைந்து கொள்வதற்கு பல நேர்வழியான முறைகள் இருந்தாலும் சிறந்த ஒரு முறையாக நிரூபிக்கப்பட்ட ஒரு மார்க்கமாக இருப்பது தான் ‘பங்குச்சந்தை முதலீடு’. எனவே நாம், பங்கு என்றால் என்ன? எவ்வாறு பங்குச்சந்தையில் ஈடுபடலாம்? என்பதனை இங்கே பார்ப்போம்.
பங்கு என்றால் என்ன ?
வரையறுக்கப்பட்ட பொதுக்கம்பனி தாம் அனுமதித்த மூலதனத்தினை குறித்த அலகினால் வகுத்து பெறப்படுவது பங்கு எனப்படும். மற்றும் ‘வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றின் உரிமையை சிறிய அலகுகளாகப் பிரிக்கும் போது ஒரு அலகின் பெறுமதியும் பங்கு’ எனக் கருதப்படும்.
பங்குச்சந்தை என்றால் என்ன ?
பொருட்களை வாங்கவும் விற்கவும் பலரும் கூடுமிடம் சந்தை. அது போல, பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்யும் இடமே பங்குச்சந்தை எனப்படும். பங்குச்சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட இருப்பிடம் தேவையில்லை. கணிணி மற்றும் முகவர்கள் மூலமாக பங்குகளை வாங்கவும் விற்கவும் முடியும். குறிப்பிட்ட சில நீண்ட கால கருவிகள் பங்கு பத்திரங்கள் அல்லது தொகுத்திக்கடன் பத்திரங்கள்) பரிமாற்றப்படும் இடம், பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகளினால் விநியோகிக்கப்படும் பங்குகள் மற்றும் தொகுதிக்கடன்கள் போன்ற பிணைப்பத்திரங்களைக் கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறும் சந்தையே பங்குச் சந்தை ஆகும்.
இலங்கையில் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களை ஏற்படுத்துவது கொழும்பு பங்கு பரிமாற்று நிறுவனத்தின் மூலமேயாகும்.
பங்குச்சந்தை முதலீடு என்றால் என்ன ?
ஒவ்வொருவரும் தமது கையிலுள்ள பணத்திற்கு சமனான வரையறுக்கப்பட்ட கம்பனிகளின் பங்குகளினை கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் ஊடாக கொள்வனவு செய்ய பயன்படுத்தும் பெறுமதி, பங்கு முதலீடு எனப்படும்.
எவ்வகையான பங்குளில் முதலீடு செய்ய முடியும்?
சாதாரண பங்குகள், முன்னுரிமை பங்குகள், பங்கு ஆணைப்பத்திரங்கள் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட தொகுத்திக்கடன்கள்
எவ்வாறு பங்குகளை கொள்வனவு செய்ய முடியும் ?
மிகப்பொதுவான வழிமுறை பங்குத்தரகர் மூலம் நடைபெறும் முறையாகும். அவர்கள் முழுநேர சேவை அளிப்பவர்களோ, அல்லது தள்ளுபடி செய்யும் விற்பனையாளராக விற்பனையாளரிடமிருந்து வாங்குவோர்க்கு பங்குமாற்றத்தை ஏற்பாடு செய்து தருகின்றவர்களாகவோ இருப்பர். கம்பனிகளால் வெளியிடப்படும் பங்குகளை வாங்கும் பணத்தை முதலீடு செய்யக்கூடிய மற்றுமொரு முறைசார் முதலீட்டு வழிமுறையாகும். பங்குச்சந்தையின் மூலம் பங்குகளைக் கொள்வனவு செய்ய முடியும். அதாவது வரையறுக்கப்பட்ட கம்பனிகள் பங்குகளை வெளியிடும் போதோ அல்லது பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் அவற்றை மீள விற்கும்போதோ பங்குகளை வாங்கலாம்.
எவ்வாறு விற்பனை செய்ய முடியும் ?
பங்கினை விற்பனை செய்வதென்பது வழிமுறை ரீதியாக பங்கினை வாங்குவதற்கு ஒப்பானது.
எப்பொழுது விற்பனை செய்ய வேண்டும்?
பொதுவாக முதலீட்டாளர்கள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க விரும்புவார்கள், அம்முறையில் இல்லாவிட்டால் குறுகியகால விற்பனையைக் கொண்டிருக்கும். இருந்தாலும் எண்ணற்றக் காரணங்கள் ஒரு முதலீட்டாளரை அவ்வாறு விற்கத் தூண்டலாம். ஒரு பங்கின் விற்பனையில் தரகரின் முயற்சிக்கான கட்டணம் விதிக்கப்படுகிறது. இது விற்பவரிடமிருந்து வாங்குபவருக்கு மாற்றம் செய்து கொடுக்கும் ஏற்பாட்டிற்காக விதிக்கப்படுகிறது. இக்கட்டணமானது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதென்பது எந்த வகையான தரகுக் கொள்வனவு மற்றும் விற்பனைக்கு இடைப்பட்ட கால எல்லையைக்கொண்டது முழுநேர சேவையா அல்லது எந்த தள்ளுபடி விற்பனைப் பரிமாற்றத்தைக் கையாளுகிறது போன்றபலவற்றைச் சார்ந்தது. பரிமாற்றம் செய்யப்பட்டப் பிறகு விற்பனையாளருக்கு அனைத்துப் பணமும் அதன் பிறகு உரிமையுடையதாகின்றது.
எவ்வகையான வருமானங்களினை பெறமுடியும்?
மூலதன இலாபம், பங்குலாபம் , வரி சலுகைகள், மூலதன இலாபம் ஈட்டப்படுகின்ற மூலதன லாபத்திற்கு முழு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது
பங்குலாபம்
பெறப்படுகின்ற பங்குலாபத்திற்கு 15சதவீதத்தினை தடுத்து வைத்தல் வரி கழிக்கப்பட்டு மிகுதி இலாபமாக பங்குதாரர்களிடம் வழங்கப்படும். இதுவே கடைசி வரியாக கருதப்பட்டு அதற்கு மேலதிகமாக வரியொன்றும் அறவிடப்படமாட்டாது.
எப்போதும் நிரந்தர வருமானம் கிடைக்குமா ?
வர்த்தக வங்கிகளின் வைப்புகளைப் போன்று ஒரு நிலையான அல்லது நிரந்தர வருமானத்தினைப் பங்குச்சந்தை வியாபரத்தில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதற்கு மாறாக அதிக வருமானத்தினைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படும். இதனாலேயே பங்குச்சந்தை வியாபரத்தில் “High Risk - High Return” எனும் தன்மை காணப்படுவதாக வியாபார நிபுணர்கள் கூறுகின்றனர்.
நட்டம் ஏற்படுமா? எவ்வாறான நட்டம் ஏற்படக்கூடும்?
அந்நட்டத்தினை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும்?
பங்குக்கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளும் நேரங்களில் ஒருவரின் நுட்பமான சந்தை கண்காணிப்பிலும், ஒருவரது கொடுக்கல் வாங்கல் திறன் நிலையிலும் அதிகம் தங்கியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் ஒருசில கம்பனிகளின் வினைத்திறனற்ற செயற்பாட்டின் மூலமும் பங்குதாரருக்கு நட்டம் ஏற்படலாம். எனவே மிகவும் அவதானமாகவும் சிறந்த ஆலோசனைகளினைப் பெற்றும் அதற்கிணங்க மிகவும் இலாபம் பெரும் பங்குகளை அல்லது நல்ல வினைத்திறனுள்ள நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து பின்னர் சரியான நேரத்தில் விற்பனை செய்யும் பொழுது இவ்வாறான நட்டத்தினைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
“பங்குச்சந்தை விளையாட்டு” மிகுந்த கவனத்துடன் ஆடப்படவேண்டும். விழிப்புடன் இருந்து முடிவுகளை உடனடியாகச் செய்வது மிகமிக அவசியமாகும். நாள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து சந்தையைக் கண்காணித்தவண்ணம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பங்கிற்கும் இலாபமோ நட்டமோ இல்லாத நிலை என்று ஒன்று உண்டு. அதை என்றும் மறக்காதீர்கள். விலை சரிகையில் அதன் அடிவரை சென்று விழும்வரை காத்திருக்காதீர்கள். இலாபமோ நட்டமோ இல்லாத நிலையில் அதனை தொடுகையில் விற்பனை செய்து விடவேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலம் ஏற்படக்கூடிய நட்டத்தினை சாதுரியமாக தவிர்த்துக்கொள்ள முடியும். மற்றும் பங்குச்சந்தையில் எதிர்நீச்சல் அடிக்க இக்கொள்கை நிச்சயமாக உதவும்.
ஒரு பங்கின் பழைய வரலாற்றை மற்றும் செயல்பாட்டினை மட்டும் நம்பி அப்பங்கினை வாங்காதீர்கள்.
அதன் எதிர்காலத்தைக் குறித்த கணிப்புகளின் அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.
முதலீடு செய்ய விரும்பும் தொகை முழுவதையும் ஒரே சமயத்தில், ஒரே பங்கில் முதலீடு செய்வதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சில சந்தர்பங்களில் காலங்களுக்கேற்ப நிறுவனங்களின் செயற்பாடுகளிலும் அதன் இலாபமீட்டும் தன்மையிலும் ஏற்ற இறக்கம் ஏற்படக்கூடியதாகையினால், வெவ்வேறுபட்ட வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பங்கில் முதலீடு செய்வது முகவும் முக்கியமானதாகும். இதுவே Diversified Portfolio எனப்படும்.
கையிலுள்ள முழுத்தொகையினையும் முதலீடு செய்யக்கூடாது. ஏனெனில் அப்பங்கின் வாங்கிய விலையைவிட நடப்புவிலை குறைவடைந்தால், கையில் மிகுதியாக இருக்கும் பணத்தில் மேலும் ஒரு பகுதியின் மூலம் அப்பங்கினை நடப்பு (குறைந்த) விலையினில் கொள்வனவு செய்வதன் மூலம் அப்பங்கிற்கான மொத்த விலையினைக் குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் .
⦁ வேறு எவ்வகையான அனுகூலங்கள் பெறமுடியும்?.
⦁ உபகாரப் பங்கிற்கு உரித்தாதல்.
⦁ இலாபப் பங்கு பெறுதல்.
⦁ உரிமை அல்லது உரித்து வழங்குதல்.
⦁ விரைவாகப் பணவடிவில் மாற்றுவதற்கான இயலுமை. (திரவத்தன்மை)
⦁ பிணைப்பாதுகாப்பு எனும் வகையில் சமர்ப்பிக்க முடியும்.
⦁ “இயக்குனர் குழுவில்” ஒருவராகப் பதவி வகிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
⦁ தீர்மானங்கள் எடுக்கும்பொழுது தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை இருக்கும்.
பின்வரும் செயற்பாடுகள் பங்குச்சந்தை நடவடிக்கைகளில் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்துவதாக அமைகின்றன.
⦁ அந்நிய நேரடி முதலீட்டு நடவடிக்கைகள்
⦁ உள்நாட்டு முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள்
⦁ நிறுவன நடவடிக்கைகள்
⦁ நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை
⦁ வைப்புகளுக்கான வங்கி வட்டி வீதமாற்றங்கள்
⦁ பணவீக்கம்
⦁ மசகு எண்ணையின் விலை மாற்றங்கள்
மேற்குறிப்பிட்டவை மட்டுமன்றி நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு, வெளிநாட்டுடன் தொடர்புடைய மாற்றங்கள், நாடு மற்றும் உலக பொருளாதார ஸ்திரத்தன்மை, திடீர் மாற்றங்கள் உலக வங்கி போன்ற பாரிய நிதி வழங்குனர்களின் கொள்கை செயற்திட்ட மாற்றங்கள் போன்றவையும் முக்கிய இடத்தினை பெறுகின்றன.
பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது நாம் அவதானிக்கக் கூடிய விலை சுட்டெண்களாக அனைத்து பங்கு விலை சுட்டெண் (All Share Price Index - ASPI) மற்றும் S&P Sri Lanka 20 Index போன்ற இரண்டு சுட்டெண்களும் அங்கம் வகிக்கின்றது.
கீழ்வரும் வரைபடமானது கடந்த சில வருடங்களின் அனைத்து விலைச் சுட்டெண்ணின் (ASPI) நிலையினை விளக்குகின்றது.
2008 தொடக்கம் 2022 வரையான காலங்களினை உன்னிப்பாகப் பார்த்தோமேயானால் பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மிக உச்ச இலாபத்தினைப் பெற்றிருந்தனர்.
அந்த வாய்ப்பினை நீங்கள் இழந்திருந்தால் தற்போது உருவாகியுள்ள இந்த இரண்டாவது சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்தி நல்ல இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் தற்போது சிறந்த நிறுவனங்களின் பங்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நடப்பு விலையானது அந்நிறுவனங்களின் பங்கிற்கான தேறிய சொத்தினைவிட மிகக் குறைவடைந்து காணப்படுவது மேலதிக நன்மையாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM