(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிமன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை செவ்வாய்கிழமை (28) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய குழு மாவட்ட மட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ள பரிந்துரைகள் , வெவ்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய பரிந்துரைகள் மற்றும் தமது முன்மொழிவுகள் என்பவற்றைப் பரிசீலனை செய்து மாவட்ட மட்டத்திலான எல்லை நிர்ணய பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மாவட்டங்களுக்கு விஜயம் செய்து குறித்த அறிக்கைக்கு தேவையான பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய மார்ச் 31ஆம் திகதிக்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. மேலும் 6 மாவட்டங்களின் செயற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஏனையவற்றில் இரு மாவட்டங்களின் செயற்பாடுகள் மாத்திரமே 50 சதவீதத்தையும் விடக் குறைவாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே எமது முழுமையான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 25 - 31ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரித்து சமர்ப்பிக்கவும் , இடைக்கால அறிக்கையை அடுத்த வாரம் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானித்துள்ளோம். அதற்கமைய தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8800இலிருந்து , 5100 அல்லது 4900 வரை குறைக்க முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM