போலி ChatGPT செயலி மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருட வாய்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ChatGPT ஆனது கடந்த சில வாரங்களாக மனிதனைப் போன்ற Chating செய்வது போன்ற பல நிகழ்வுகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. AI chatbotஇன் சுவாரஸ்யமான பதில்கள் நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகின்றன. ஆனால், ChatGPT ஐ முயல வேண்டும் என்ற ஆர்வத்தை இப்போது சைபர் கிரைமினல்கள் பயனர்களை ஏமாற்ற பயன்படுத்திவருகின்றனர்.
மோசடி செய்பவர்கள் சமூக ஊடகச் சான்றுகள் உட்பட உங்களின் முக்கியமான தகவல்களைத் திருடக்கூடிய பிரத்தியேகமாக நிர்வகிக்கப்பட்ட போலி ChatGPTயைப் பயன்படுத்துகின்றனர். சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கியின் ஆராய்ச்சியாளர்கள் குழு, சைபர் கிரிமினல்கள், பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் விநியோகிக்கப்படும் ChatGPT போல தோற்றமளிக்கும் Bot ஒன்றை வடிவமைத்துள்ளனர் என்று கண்டறிந்துள்ளனர்.
சமூக ஊடக பயனர்கள் அவர்களை ChatGPT க்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், ஈர்க்கப்படுகிறார்கள். குரோம், எட்ஜ், பயர்பாக்ஸ் மற்றும் பிரேவ் போன்ற பிரபலமான உலாவிகளில் சேமிக்கப்பட்ட முக்கியமான தகவல்களை இந்த போலியான ChatGPT போலத் தோன்றும் ட்ரோஜன் திருடும் திறன் கொண்டது.
இந்த கணினி தாக்குதலின் ஒரு பகுதியாக, ட்ரோஜன் பயனர்களின் பணத்தின் அளவு மற்றும் வணிகக் கணக்குகளின் தற்போதைய இருப்பு போன்ற கூடுதல் தகவல்களைப் பெற முயல்வதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM