புட்டின் உக்ரேன் மீதான சட்டவிரோத ஒழுக்கக்கேடான ஆக்கிரமிப்பை நிறுத்தவேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
உக்ரேன் படையினருக்கு 33 மில்லியன் டொலர் பெறுமதியான ஆளில்லா விமானங்களை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.
இதேவேளை 90 ரஷ்யர்கள் மற்றும் 40 ரஸ்ய அமைப்புகளிற்கு எதிராக தடைகளையும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
யுத்தம் ஓரிருநாட்களில் முடிவிற்கு வந்துவிடும் என ரஷ்யா நினைத்தது என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் தொடரும் யுத்தம் உக்ரனை மாத்திரம் தாக்கவில்லை உலக ஒழுங்கின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தலைமையிலான மக்களின் துணிச்சல் உறுதிப்பாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர்கள் பெரும் தியாகங்களை செய்துள்ளனர் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்,உட்கட்டமைப்பு தங்களின் வாழ்க்கை தரம் ஆகியவற்றை தியாகம் செய்துள்ளனர், அவர்கள் தொடர்ந்தும் கடும் அழுத்தங்களிற்குள் வாழ்கின்ற போதிலும் உறுதியாக உள்ளனர் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM