(எம்.எம்.சில்வெஸ்டர்)
கடந்த 6 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கானா நாட்டு கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியன் அட்சு உயிருடன் மீட்கப்படவில்லை, அவர் உயிரிழந்துள்ளதாக கிறிஸ்டியன் அட்சுவின் முகாமையாளரான முராத் ஹுஸுன் மேஹ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கானா கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியன் அட்சு துருக்கியில் உள்ள அட்டேஸ்போர் (Hatayspor) அணியை பிரதிநிதிப்படுத்துபவர் ஆவார்.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிறிஸ்டியன் அட்சு தங்கியிருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், மீட்புப் பணியாளர்களின் போராட்டத்திற்கு பின்னர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அட்டேஸ்போர் அணியின் முகாமையாரளர் முன்னர் தெரிவித்திருந்தார்.
இது இவ்வாறிருக்கையில், கிறிஸ்டியன் அட்சு தங்கியிருந்த கட்டம் இடிந்து விழுந்ததில் அவர் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும்,
இடிபாடுகளிலிருந்து கிறிஸ்டியன் அட்சு சடலமாக கடந்த 18 ஆம் திகதியன்று மீட்கப்பட்டதாக அவரின் பிரத்தியே முகாமையாளர் முராத் உஸுன்மெஹ் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டியன் அட்சுவின் உடல் விமானம் மூலம் கானாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது இறுதிச் சடங்குகள் அரச மரியாதையுடன் கடந்த 22 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 47,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM