நாட்டுப் பிரச்சினையை தீர்க்க எதிர்கட்சித் தலைவர் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் - இந்து சமய தலைவர்கள்

Published By: Vishnu

23 Feb, 2023 | 08:42 PM
image

(எம்.நியூட்டன்)

நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்கட்சித் தலைவர் பூண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என இந்து சமயத்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்த பிரேமதாசா நல்லை ஆதினத்தில் நல்லை ஆதீன குருமுதல்வரையும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சோற்செல்வர் ஆறு திருமுருகனையம் சந்தித்து கலந்தரையாடினார்.

இச் சந்திப்பபு தொடர்பாக ஆறுதிருமுருகன் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தமையையிட்டு நாங்கள் வரவேற்ககின்றோம் எங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் எடுத்துரைத்து வருகின்றோம் எனினும் அந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை எனினும் எமது கோரிக்கைகளை நாம் முன் வைக்கின்றோம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நீங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓத்துளைப்பு வழங்குங்கள் குறிப்பாக இந்து சமயத்தவர்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் பௌத்த சமயத்தவர்கள் இந்து சமயத்தவர்களை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் இது எமக்கு மன வேதனையை ஏற்படுத்துகின்றது. இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

கீரிமலை - காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள கோவில்கள் விடுவிக்கின்ற முயற்சிகளை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளவேண்டும். 

பல தடவைகள் இது தொடர்பில் பல தடவைகள் கூறிவிட்டோம் மேலும்  கடற்படையின் பராமரிப்பிலுள்ள தல்சவன கொட்டல் பயன்படுத்தப்படுகின்ற 200 வருடங்கள் பழமை வாய்ந்த திருகோணச்சக்கரம் என்று கூறப்படுகின்ற சிவபூமி அறக்கட்டளைக்குரிய நிலத்தினை விடுவிக்கவேண்டும், நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பூரண ஒத்துழைப்பினை எதிர்க்கட்சித் தலைவர் வழங்கவேண்டும்.

வீட்டுத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை பிரோம தாசாவே ஆரம்பித்து வைத்தார் அந்தப் பணி சிறப்பானது அதுதொடரவேண்டும் 200 வருடங்களுக்கு மேலாக மலையகத்தமிழர்கள் இன்னமும் அடிமைகளாக வீடுவாசல்கள் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36