(எம்.நியூட்டன்)
நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்கட்சித் தலைவர் பூண ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என இந்து சமயத்தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்த பிரேமதாசா நல்லை ஆதினத்தில் நல்லை ஆதீன குருமுதல்வரையும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சோற்செல்வர் ஆறு திருமுருகனையம் சந்தித்து கலந்தரையாடினார்.
இச் சந்திப்பபு தொடர்பாக ஆறுதிருமுருகன் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தமையையிட்டு நாங்கள் வரவேற்ககின்றோம் எங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் எடுத்துரைத்து வருகின்றோம் எனினும் அந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை எனினும் எமது கோரிக்கைகளை நாம் முன் வைக்கின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நீங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஓத்துளைப்பு வழங்குங்கள் குறிப்பாக இந்து சமயத்தவர்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் பௌத்த சமயத்தவர்கள் இந்து சமயத்தவர்களை ஆக்கிரமிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் இது எமக்கு மன வேதனையை ஏற்படுத்துகின்றது. இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
கீரிமலை - காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள கோவில்கள் விடுவிக்கின்ற முயற்சிகளை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளவேண்டும்.
பல தடவைகள் இது தொடர்பில் பல தடவைகள் கூறிவிட்டோம் மேலும் கடற்படையின் பராமரிப்பிலுள்ள தல்சவன கொட்டல் பயன்படுத்தப்படுகின்ற 200 வருடங்கள் பழமை வாய்ந்த திருகோணச்சக்கரம் என்று கூறப்படுகின்ற சிவபூமி அறக்கட்டளைக்குரிய நிலத்தினை விடுவிக்கவேண்டும், நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பூரண ஒத்துழைப்பினை எதிர்க்கட்சித் தலைவர் வழங்கவேண்டும்.
வீட்டுத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரின் தந்தை பிரோம தாசாவே ஆரம்பித்து வைத்தார் அந்தப் பணி சிறப்பானது அதுதொடரவேண்டும் 200 வருடங்களுக்கு மேலாக மலையகத்தமிழர்கள் இன்னமும் அடிமைகளாக வீடுவாசல்கள் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM