(எம்,ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசை ரணில்- ராஜபக்ஷ குடும்ப ஆட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் வெகுவிரைவில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை கவலைக்குரியது. நாட்டு மக்களின் அடிப்படை தேர்தல் உரிமையை ஜனாதிபதி பறித்துள்ளார்.
இது பாராளுமன்றத்தில் வெளிப்பட்டு விட்டது. நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை நகைப்புக்குள்ளாக்கியுள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசை ரணில் - ராஜபக்ஷ குடும்ப ஆட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்,நீதிமன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் ஜனாதிபதி செயற்படுகிறார்.
உள்ளுராட்சிமனறத் தேர்தலுக்கு ஏற்படுத்திய தடைகளை ஜனாதிபதி வெட்கமில்லாமல் குறிப்பிடுகிறார்.தேர்தலை நிதி ஒதுக்கும் போது மாத்திரம் தான் நிதி நெருக்கடி ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மலினப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டு மக்கள் வெகுவிரைவில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM