தேர்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

Published By: Digital Desk 3

23 Feb, 2023 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஆயத்தங்களையும் செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடுமாறு கோரி ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இன்று வியாழக்கிழமை குறித்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தேர்தலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தேர்தலுக்கான நிதியை திறைசேரி விடுவிக்காமையின் காரணமாக தேர்தலை நடத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துமாறு உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்துள்ள ரிட் மனு கடந்த 20ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை என்பதால் அதனை இன்று வியாழக்கிழமை பரசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கமை இந்த ரிட் மனு மீதான பரசீலனையை எதிர்வரும் மே 11ஆம் திகதி ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32