சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து ஜேர்மனியப் பாராளுமன்ற உறுப்பினருக்கு அலி சப்ரி விளக்கம்

Published By: Digital Desk 5

23 Feb, 2023 | 02:31 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் என்பன உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரம் குறித்து ஜேர்மனியப் பாராளுமன்ற உறுப்பினர் பீற்றர் ரம்ஸோருக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அறிக்கையாளராகப் பதவிவகிக்கும் பீற்றர் ரம்ஸோர் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்தார்.

இவ்விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்த பீற்றர் ரம்ஸோர், இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

அதேவேளை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிலையத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சியின் விளைவாக நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பினை அடிக்கோடிட்டுக்காண்பித்த அமைச்சர் அலி சப்ரி, பல்வேறு செயற்திட்டங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதை முன்னிறுத்திய நடவடிக்கைகள், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் என்பன உள்ளடங்கலாக நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரம் குறித்து பீற்றர் ரம்ஸோருக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03
news-image

முச்சக்கரவண்டியின் பாகங்கள்,ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது

2025-02-09 17:27:04
news-image

தோணா பாலம் - மீள் கட்டுமான...

2025-02-09 17:25:24
news-image

கெக்கிராவயில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2025-02-09 17:24:34
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

2025-02-09 17:02:16
news-image

நாட்டில் 80 வீதமான பகுதிகளுக்கு மின்...

2025-02-09 17:20:22