(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட படி நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் , அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவின் உள்ளிட்ட அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்கு உரிய முறையில் முன்னெடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் , இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அரச அதிகாரிகள் வெ வ்வேறு காரணிகளைக் குறிப்பிட்டு தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதனை வெற்றிகரமான நிறைவடையச் செய்வதற்காக நிதி அமைச்சு, பொலிஸ், அரச அச்சகம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட தரப்பினர் ஒத்துழைக்காமையினால் தேர்தல் நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த நிலைமை ஜனநாயக நடைமுறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், எதிர்கால தேர்தல்களில் மோசமான முன்னுதாரணமாகவும் அமையும். எனவே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பிலும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM