உக்ரைன் மோதலின் நிழலின் கீழ் நடைபெறும் ஜி-20 நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் எதிர்வரும் கூட்டங்களில் நுண் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மை தொடர்பான மாநாட்டை இந்தியா அடுத்த மாதம் நடத்துகிறது.
இதற்கு அனைத்து அண்டைய நட்பு நாடுகளும் அழைக்கப்பட்டுள்ளன. ஆனால், மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களில் பாகிஸ்தான் கலந்துகொள்ளவில்லை.
இந்த மாநாடானது எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடைபெறும். ஜி-20 நிதிப் பாதையின் கீழ் முக்கிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஜி20 உறுப்பு நாடுகளைத் தவிர குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நாடுகள் அழைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம் பெங்களூருவில் நாளை (24) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் எதிர்வரும் மார்ச் 1ஆம், 2ஆம் திகதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
ஜப்பானின் ஹயாஷி யோஷிமாசா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் கனடாவின் மெலனி ஜோலி உட்பட கிட்டத்தட்ட அனைத்து ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM