கணவனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து இளம் தாய் தற்கொலை

Published By: Digital Desk 3

22 Feb, 2023 | 01:59 PM
image

காரைதீவு 09 ஆம் பிரிவில் கண்ணகி கிராமத்தை சேர்ந்த 29 வயது இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான கே. கமலரூபிணி என்பவரே கணவனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தூக்கிட்டு உள்ளார்.

உறவினர்கள், அயலவர்கள் இரவு 8 மணியளவில் அவரை மீட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இறந்து விட்டார் என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பிண அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சம்மாந்துறை நீதிவானின் அறிவுறுத்தலுக்கு அமைய சாய்ந்தமருது பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹீர் மறுநாள் மரண விசாரணை மேற்கொண்டார்.

காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் சகிதம் இவர் சம்பவ வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கமலரூபிணியின் தாயார், அயல் வீட்டுக்காரர் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்தார்.

இவருடைய அறிவுறுத்தலுக்கு அமைய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள், உடல் கூற்று பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் பிரகாரம் தூக்கில் தொங்கியதால் கழுத்து இறுகி ஏற்பட்ட மரணம் என்று மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கி உடலத்தை  உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56