இலங்கையில் மீண்டும் ஒரே பகுதியில் 3 ஆவது முறையாக நிலநடுக்கம் பதிவு

Published By: Digital Desk 3

22 Feb, 2023 | 01:44 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மொனராகலை மாவட்டத்தின் புத்தல, வெல்லவாய பகுதியில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் 3.3 ரிச்டர் அளவிலான  நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், எதிர்வரும் சில நாட்களில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும்  புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க அளவை பணியகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் மஹிந்த செனவீரட்ண  வீரகேசரிக்கு தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

"அண்‍மையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதிகளிலே இன்றைய தினமும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தல மற்றும் வெல்லவாய பகுதிகளின் 5 கிலோ மீற்றர் பரப்புக்கு உட்பட்ட பகுதிகளில் 7 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2 வார காலத்தில் 4 ஆவது தடவையாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இதன்படி, கடந்த 10 ஆம் திகதியன்று 3.0 மற்றும் 3.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்ததுடன், கடந்த 11 ஆம் திகதியன்று 2.3  ரிச்டர்அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தன. 

இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் எனவும், நிலநடுக்கம் குறித்து போதிய  அவதானத்தையும் நாம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55