அவிசாவளையில் வயோதிபப் பெண்ணை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் : படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 5

21 Feb, 2023 | 02:50 PM
image

அவிசாவளை  வெவில கட்டுவாவில வீடு ஒன்றில்  தனியாகவிருந்த வயோதிப் பெண்ணைப்  பயமுறுத்தி  50,000 ரூபா கப்பம் பெற முயற்சித்த  இனந்தெரியாத நபர்  ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில்   படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தன.

இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் முகத்தை  துணியால் மறைத்து வந்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் சமரசிங்க ஆராச்சிகே பத்மாவதி என்ற 66 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (20) இரவு 8 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டின் முன் வந்து கதவைத் திறக்குமாறு கூறி  வயோதிபப் பெண்ணை மிரட்டியே  ஜன்னல் வழியாக  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு  தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் தனது உறவினரிடம் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கு சென்று  ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரது வயிற்றின் இடது பக்கம் சுடப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51