வன்வெப் - 36 செயற்கைக்கோள்களின் ஒரு தொகுதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவைச் சென்றடைந்ததாக இங்கிலாந்தைச் சேர்ந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதனை உறுதிப்படுத்தியது.
புளோரிடாவிலிருந்து கிட்டத்தட்ட 9,000 மைல் பயணத்தைத் தொடர்ந்து, எங்கள் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இந்தியாவிற்கு வந்துவிட்டனஎன்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. மேலும் இஸ்ரோ மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடனான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளோம் என்று வன்வெப் தெரிவித்துள்ளது.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஏவுகணை வாகனம் மார்க்-3 மூலம் ஏவப்படும். கடந்த ஆண்டு அக்டோபரில், இந்திய விண்வெளி நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வன்வெப் மூலம் 36 செயற்கைக்கோள்களின் முதல் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இது உலகளாவிய வணிக ஏவுதள சேவை சந்தையில் ராக்கெட் நுழைவதைக் குறிக்கிறது.
தனியார் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான வன்வெப் இந்திய நிறுவனங்களில் ஒரு பெரிய முதலீட்டாளராகவும் பங்குதாரராகவும் கொண்டுள்ளது. விண்வெளித் துறையின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வன்வெப்-ஐ இயக்கும் நெட்வேர்க் எக்சஸ் எசோசியேடட் உடன் முன்னதாக இரண்டு சேவை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM