தேர்தல் குறித்த ரிட் மனுவை வியாழனன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

Published By: Digital Desk 3

21 Feb, 2023 | 09:09 AM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துமாறு உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை நாளை மறுதினம் வியாழக்கிழமை (23) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பினை 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருந்த போதிலும் , குறித்த தினங்களில் வாக்கெடுப்பு இடம்பெறாது என கிடைக்கப் பெற்ற நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் நேற்றைய தினம் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அவசியமல்ல என்று தேர்தல் ஆணைக்குழு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் , இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதால் , தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யு.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உயர் நீதிமன்றத்தில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் , அதனை மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. எவ்வாறிருப்பினும் தபால் மூலம் வாக்கெடுப்பு 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், அதற்கு முன்னர் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது தேர்தல் ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் , 23ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது என்பதால் இந்த மனுவை ஏற்கனவே தீர்மானித்த படி 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்க மனுதாரர் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா உள்ளிட்டவர்களால் ஆட்சேபனை வெளிப்படுத்தப்படாமையால் , குறித்த ரிட் மனுவை 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர் குழாம் தீர்மானித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09