(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துமாறு உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை நாளை மறுதினம் வியாழக்கிழமை (23) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பினை 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருந்த போதிலும் , குறித்த தினங்களில் வாக்கெடுப்பு இடம்பெறாது என கிடைக்கப் பெற்ற நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் நேற்றைய தினம் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது அவசியமல்ல என்று தேர்தல் ஆணைக்குழு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் , இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பதால் , தேர்தலை ஒத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டபிள்யு.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உயர் நீதிமன்றத்தில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் , அதனை மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. எவ்வாறிருப்பினும் தபால் மூலம் வாக்கெடுப்பு 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், அதற்கு முன்னர் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய எஸ்.துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று திங்கட்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது தேர்தல் ஆணைக்குழு சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் , 23ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது என்பதால் இந்த மனுவை ஏற்கனவே தீர்மானித்த படி 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கைக்க மனுதாரர் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா உள்ளிட்டவர்களால் ஆட்சேபனை வெளிப்படுத்தப்படாமையால் , குறித்த ரிட் மனுவை 23ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர் குழாம் தீர்மானித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM