திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டுதோறும் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை சித்திரிக்கும் திருப்பாடுகளின் நாடகத்துக்கான பிரதி வழங்கும் வைபவம் தவக்காலத்தின் ஆரம்ப நாளான நாளை மறுதினம் (22) புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் 'கலைஞான சுரபி' தியான இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் திருமறைக் கலாமன்றத்தின் ஆரம்பகால இயக்குநர்களில் ஒருவரும் ஊறணி பங்குத்தந்தையுமான அருள்பணி தி.இ.தேவராஜன் அடிகள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கவுள்ளார்.
அத்துடன், ஆற்றுகையில் பங்கேற்கவுள்ள கலைஞர்களுக்கான பிரதிகளையும் வழங்கி வைப்பார்.
இந்த ஆண்டு எதிர்வரும் மார்ச் 30 மற்றும் 31ஆம் திகதிகளிலும், ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் திகதிகளிலுமாக நான்கு நாட்களுக்கு 'குருதி கழுவிய குவலயம்' என்னும் திருப்பாடுகளின் நாடகம் மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.
இந்நிலையில், பிரதி வழங்கும் நிகழ்வில் வழமையாக திருப்பாடுகளின் நாடகத்தில் பங்கேற்கும் அனைத்து கலைஞர்களையும், புதிதாக இணைந்துகொள்ள விரும்புபவர்களையும் கலந்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM