வாக்குச்சீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம்

Published By: Nanthini

18 Feb, 2023 | 04:26 PM
image

(நா.தனுஜா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதை நிராகரிப்பதற்கான வாய்ப்பு அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு இருக்கின்றது என்றால், நாளை ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ உரிய வாக்குச்சீட்டுக்களை அச்சிடுதல் நிராகரிக்கப்படுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும் என்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளுக்கு மத்தியில் அநாவசியமாக மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தலையீடுகள் மிகவும் ஆபத்தானவையாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டமையால் தபால் மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

அதனையடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக நேற்று (17) தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேலும் கூறியிருப்பதாவது:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதை இன்று நிராகரிப்பதற்கான வாய்ப்பு அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு இருக்கின்றது என்றால், நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ உரிய வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணி நிராகரிக்கப்படுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தமுடியும்?

வருங்கால அரசாங்கம் போதியளவு நிதி இல்லை என கூறி பொதுத் தேர்தலையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தால் என்ன நேரும்? 

ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மற்றும் நடைமுறைகளுக்கு மத்தியில் அநாவசியமாக மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தலையீடுகள் மிகவும் ஆபத்தானவையாகும் என்று எச்சரித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41