(நெவில் அன்தனி)
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ள 2ஆவது உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை ஏ அணியில் ஏஞ்சலோ மெத்யூஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இரண்டாவது போட்டியை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களைக் கொண்ட குழாத்தில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவர், சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே, வேகப்பந்து வீச்சாளர்களான இசித்த விஜேசுந்தர மற்றும் அம்ஷி டி சில்வா ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
முதலாவது போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்ற ப்ரவீன் ஜயவிக்ரம, சாமிக்க கருணாரட்ன, மிலான் ரத்நாயக்க ஆகியோர் நீக்கப்பட்டே இந்த மூவரும் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் இலங்கை ஏ அணி தோல்வி அடைந்த முதலாவது போட்டியில் சாமிக்க கருணராட்ன துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி அரைச் சதம் குவித்திருந்தார். ஆனால் பந்துவீச்சில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது.
இந்தியாவில் இந்த வருட பிற்பகுதியில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை குறிப்பாக மத்திய வரிசையைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் மெத்யூஸை தேசிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இணைப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஏ அணியின் தலைவராக தொடர்ந்தும் சதீர சமரவிக்ரம செயற்படுவார்.
இலங்கை ஏ குழாம்
அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, ஏஞ்சலோ மெத்யூஸ், சதீர சமரவிக்ரம (தலைவர்), சஹான் ஆரச்சிகே, துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்த, ப்ரமோத் மதுஷான், கவிஷ்க அஞ்சுல, இசித்த விஜேசுந்தர, அம்ஷி டி சில்வா. லஹிரு உதார, நிப்புன் தனஞ்சய, சுமிந்த லக்ஷான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM