இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'லவ் டுடே' திரைப்படம் படமாளிகையில் நூறு நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான எடிட்டர் மோகன், இயக்குநரும், நடிகருமான ஜெயம் ராஜா, இயக்குநரும், நடிகருமான ஆர். வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதியாக பங்குபற்றினர். இவர்களுடன் பட குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் ஜெயம் ராஜா பேசுகையில், '' ஏஜிஎஸ் நிறுவனம் எம்முடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய மறக்க இயலாத நிறுவனம். 'சந்தோஷ் சுப்பிரமணியம்' எனும் படத்தை இயக்கிய பிறகு மீண்டும் படத்தை இயக்க வாய்ப்பளித்த போது தயாரிப்பாளர்கள், 'ரீமேக் கதை வேண்டாம். உங்களுடைய கதையை படமாக்குங்கள்' என்று கேட்டுக் கொண்டனர். இது எமக்குள் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் கேட்டுக் கொண்டதால் தான் 'தனி ஒருவன்' எனும் சாதனை படைப்பு உருவானது. இதற்காக இவர்களுக்கு எந்நாளும் நன்றியுடன் இருப்பேன். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும், தரமான வெற்றியை அளிக்கும் படைப்பாகவே இருக்கும். இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு எம்முடைய வாழ்த்துக்கள். உங்கள் மீது அதீத எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். கடினமாக உழைத்து அதனை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்'' என்றார்.
முன்னதாக இவ்விழாவில் ஷாம் விஷால்- சிவாங்கி ஆகியோர் பங்குபற்றிய இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்வு நடைபெற்றது. 'லவ் டுடே' திரைப்படத்தை வெற்றிப் படமாக்கிய படமாளிகை அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளுக்கும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM