ஆதியந்தமற்ற முதன்மை நிறை
முழுமுத நித்தில சிவனார்த் தரணியாம்
ஈஷ்வரன் நல்வரம் மேவி
இலங்கை வேந்தன் ராவணேஷ்வரன் ஆண்ட
ரத்தினத்தீவெனும் லங்காபுரி புவனபதி
உத்திர கைலாயம் நிகர் கொண்டு
தக்ஷிணமாய் கேது மூர்த்தி தவமியற்றிய
புண்ணிய ஷேத்திரமாம் திருக்கேதீச்சரம்
மஹாதலமென சிவனடியார்
'சிவராத்திரி விழா' காணும்
கௌரியம்பாள் உடனுறை
திருக்கேதீச்சரத்தானே போற்றி...!
சதுர்யுகத் தேவனாம்
ஸ்ரீ விஷ்வகர்மா வழித்தோன்றல்
மனு, மய, சிற்பி, துவஷ்டா, விஷ்வக்ஞ எனும்
துவஷ்ட்டாவின் அருந்தவப் புதல்வியாம்,
வீணைக்கொடியோன் நற்துணை
ஸ்ரீ மண்டோதரிக்கு நல்வரம் நல்கி,
பாலாவிக் கரைதனில் வன்னி விருட்சத்துடன்
திருக்கோவில் கொண்டு
'சிவராத்திரி காணும்'
திருக்கேதீச்சரத்தானே போற்றி...!
திருத்தேவார ஒலியால்
சமய குரவர் சம்பந்தர்
சுந்தரர் செந்நாவுதனில்
பாமாலை சூடி,
மாந்தையென நவிலும் மாதோட்டம்
அகம் செய் மாதொரு பாகனே,
மகா சூரனாம்
சூரபத்மன் குலவழி
துவஷ்ட்டா பிள்ளைப் பேறளித்த
பெருவள்ளல்லென,
திருவீழிமிழலை திருத்தாண்டக வரிகளில்
அப்பர் பெருமான்
"கேதீச்சரம் மேவினார் கேதாரத்தார்"
துதியுடன் 'சிவராத்திரி விழா' காணும்
திருக்கேதீச்சரத்தானே போற்றி....!
கற்கோயிலாய் தஞ்சைப் பெருவுடையார்
பொற்கோயில் ஒத்த வகையில்
நிர்மானம் கண்டு
சோழப் பேரரசால்
"ராஜராஜ மஹா தேவன் கோயில்" என
அகிலம் புகழ்சூழ் திருநாமம் சூடி
மஹாலிங்கத் தலமென
சோமஸ்கந்த பெருமூர்த்தியாய் எழுந்தருளி,
ஈகை நிறை ஈழத்தீவகந்தனில்
ஈஷ்வரனார் அருளீந்து
'சிவராத்திரி விழா' காணும்
திருக்கேதீச்சரத்தானே போற்றி....!
பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின்
கரைமேல் நற்கோவில் கொண்டு
சித்தம் தழைத்தோங்க
பக்திப் பெருக்கோடு நித்தம்
பக்திதனை தத்தம் செய் சிவனடியார்கள்
குறையகல நித்தமும் அருள்வாரி வழங்கும்
வள்ளலாய், எண்திசை நீர்த்திரை துதி பாட
கௌரியம்மை சமேதராய்
திருக்கோவில் எழுந்து
'சிவராத்திரி விழா' காணும்
திருக்கேதீச்சரத்தானே போற்றி....!
ஈச்சரங்கள் ஐந்தில் முதலென விளங்க,
முத்துத்தமிழ் செந்தேனுறை ஈழநாவலன் ஆறுமுகன்
"தேன் பொந்தெ"ன திருவாய் மொழிய,
குபேரப்பட்டணச் சரித்திரம் தழைக்க,
சோழர் குலத்தவர் வைகாசி விசாக சப்த
நற்தினங்கள் பெருவிழா கீர்த்தி கண்ட,
அகிலம் வாழ் சைவத் தமிழர் உவகை பொங்க,
மாசிச் சதுர்த்தசி தனில்
'சிவராத்திரி விழா' காணும்
திருக்கேதீச்சரத்தானே
போற்றி போற்றி போற்றி..!
- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM