'இயக்குநர் இமயம்' பாரதிராஜா மற்றும் நடிகர் அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'திருவின் குரல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'திருவின் குரல்'. இதில் இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா மற்றும் நடிகர் அருள்நிதி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
நடிகை ஆத்மிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சின்டோ பொடுத்தாஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார்.
முதியவர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பாரதிராஜா கையில் பிரத்யேக பையுடன் இருப்பதும், அருள்நிதி தாடியுடன் சோகமான மற்றும் அர்த்தமான தோற்றத்துடன் இருப்பதும், இதன் பின்னணியில் மருத்துவமனை ஒன்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனம் ஒன்றும் இடம்பெற்றிருப்பதால், இப்படத்தின் கதை, மாற்றுத்திறனாளிகள் அல்லது உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM